Wednesday, January 30, 2008

தூக்கம்

தூங்காமை வேண்டுமென்கிறார் வள்ளுவர்। 'விழித்திரு என்கிறார் வள்ளலார்। தூங்காமலிருப்பது சாத்தியமா? தூக்கம் குறித்து எங்கள்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்களேன்....?

வள்ளுவரும் வள்ளலாரும் சொன்னது அகவிழிப்பு.
எறும்புகள் தூங்குவதில்லை. மனிதர்கள் தூங்காமலிருக்க முடிவதில்லை; தூக்கத்தின்போதுதான் 'அட்ரினோ கார்ட்டி கார்ட்ரோபின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. அது உடலையும் மனதையும் சமநிலைபடுத்துகிறது.
ஆண்களைவிடப் பெண்களுக்கு ஒரு மணிநேரத் தூக்கம் அதிகம் தேவையென்று சற்றுமுன் கிடைத்த விஞ்ஞானத் தகவல் கூறுகிறது. எட்டுமணிநேரம் தொடர்ந்து தூங்காமல் இரண்டு நான்கு மணி நேரங்களாகப் பகிர்ந்து தூங்குதல் கூடுதல் பயனளிக்கும் என்கிறது அண்மை ஆராய்ச்சி.
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தூக்கத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. பூனை பதெனெட்டு மணி நேரம் தூங்குகிறது. கோலா கரடி இருபத்திரண்டு மணி நேரம் தூங்குகிறது. நத்தை மூன்று வருடம் தூங்குகிறது. இருபது நிமிடம் மட்டுமே தூங்குகிறது ஒட்டகச்சிவிங்கி. டால்பின் ஒரு கண்ணால் மட்டுமே தூங்குகிறது. வானில் பறக்கும் பறவைகள் பறக்கும்போதே தூங்கிக்கொள்கின்றன. ஆனால் ஒரு தூக்கத்தின் நீளம் ஒன்பது நொடிகள் தாம்; நூற்றுக்கணக்கான ஒன்பது நொடிகள் தூங்கிக் கொண்டே பறக்கின்றன.
தூக்கத்தின்போது எட்டில் ஒரு மனிதன் குறட்டை விடுகிறான். பத்தில் ஒரு மனிதன் பல்லைக் கடிக்கிறான். அதிகபட்சமாய் ஒரு மனிதன் பதினெட்டு நாட்கள் இருபத்தொரு மணிநேரம் தூங்காமல் இருந்திருக்கிறான். அதன்பிறகு அவனை சோதித்தால் சித்தப்பிரமை - பார்வைக்குறைவு - நாக்குழறுதல் நினைவிழப்பு நேர்ந்திருக்கிறது.
எனக்கு தெரிந்து கவிஞர் முத்துலிங்கம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் தூங்காமலிருக்கிறார். எத்தனை முயன்றும் தூக்கம் வரவில்லை; ஆனால் பெரிய பக்க விளைவுகள் ஏதும் அவருக்கு நேரவில்லை என்பது ஆறுதலான - ஆச்சரியமான செய்தி.
படுக்கையில் சாய்ந்தவுடன் எவ்வளவு நேரத்தில் தூக்கத்துக்குள் நுழைகிறீர்கள் என்று கவனித்துப் பாருங்கள். ஏழு முதல் பன்னிரண்டு நிமிடங்களுக்குள் தூங்கிவிட்டால் உடம்பும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அர்த்தம்; இல்லையேல் வாழ்க்கை முறை மாற்றுவது உத்தமம்.

No comments: