பட்ட மேற்படிப்பு........................
முன்பு போல அல்லாமல் இங்கே எல்லாமே சுறுசுறுப்பு, விருவிருப்புதான், பேராசிரியர்கள் இல்லை எல்லோரும் வெளிநாடுகளில் ஆராய்ச்சி, ஆஸ்திரேலியா, ஜிம்பாவே, லண்டன் போண்ற இடங்களில் ஆராய்ச்சிக்காக சென்றிருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவராக என் இரண்டாமாண்டில் தான் திரும்பினார்கள் ஆனாலும் யாரும் பாடம் நடத்தவில்லை। வகுப்பில் எப்போது ஜோடி ஜோடியாக அமர்ந்து கடலையோ கடலைதான்। ஆனால் அனைவருமே படிப்பில் கெட்டிக்காரர்கள் தான்। இந்த அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் படித்து 97% சதவிகிதம் வாங்கியவர்கள் எல்லாம் இங்கே மண்ணை கவ்வி அனைத்து பாடத்திலுமே பெயிலானார்கள்। அப்படி ஒரு பாடத்திட்டம்। நாம் எப்போதும் போல 60-65% தான், எனக்கு மார்க்கு முக்கியமல்ல புரிதல்தான் முக்கியம். ஒருவேளை இவன் என்ன படிப்பாளியாக தெரியவில்லையே என்று நினைக்கலாம். ஆனால் மதிப்பென்னைவிட செயல்முறையில் தான் நடைமுறை திறம் இருக்கிறது. ஆறு மாதம் புராஜெக்ட் கே.ஜி இன்போசிஸ்டம்ஸ் நிறுவணத்தில் அப்போதைய கோவை புட் செல் டி.எஸ்.பி, இளங்கோவனின் சிபாரிசில் கே.ஜி மருத்துவமனைக்கு ஒரு சாப்ட்வேர் தயாரித்தேன். அப்போதே மேட்டூர் மால்கோவில் புராஜெக்ட் கிடைத்தது ஆனால் அங்கு செய்யவில்லை.
அண்ணையை இழந்த துயரம்.........
எங்கள் வீட்டில் யாருமே எதிர்பாராத ஒரு துயரச்செய்தி என் தாயாரை புற்றுநோய் தாக்கியிருந்ததுதான்। ஆரம்பத்தில் ஒரு சிறிய கட்டிதான் என்று கூறினார் குடும்ப டாக்டர் ஆனால் எனக்கு சந்தேகம் இருந்ததால் நான் சென்னை இராமசந்திராவிற்கு போகலாம் என்றேன்। ஆனால் அடுத்த நாளே சேலத்திலுள்ள ஒரு மருத்துவமணையில் அறுவை சிகிச்சையை எந்த பரிசோதனையும் இன்றி செய்துமுடித்து அடுத்த நாள் வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டனர்। அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்ட திசுவை கோவையில் உள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவு தெரிய மூண்று நாட்கள் ஆகிவிட்டது, முடிவோ பேரதிர்சியாக இருந்தது. அதற்குள் இரத்தத்தில் கலந்த நச்சு உடலில் பரவ ஆரம்பித்த பிறகுதான் இராமசந்திராவில் சேர்த்தோம், அங்கு நல்ல சிகிச்சையளிக்கபட்டது ஆனாலும் முதலிலேயே தவறு நிகழ்ந்துவிட்டதால் இனி சிக்கலை எப்படி தீர்ப்பது சிரமமாக இருந்தது. அறுவை சிகிச்சை, கதிர் சிகிச்சை என மாறி மாறி சிகிச்சையளிக்கப்பட்டது, ஆனால் இறுதியாக மூளையை தாக்கி தன் கோரத்தை காட்டியது புற்றுநோய். உடனே மீண்டும் இராமசந்திராவிற்கு போனாலோ கைவிரித்துவிட்டனர், அடையார் கேன்சர் இன்ஸ்ட்டியூட்டில் சேர்க்க முயற்சி செய்தால் அங்கும் அனுமதிக்கப்படவில்லை. எனவே தேனாம்பேட்டை ராய் மெமோரியல் மருத்துவமனையில் சேர்த்து ஒரு மாதம் சிகிச்சையளித்தோம் கொஞ்சம் நம்பிக்கை வந்தாலும் மனதில் ஒரு அச்சம் இருந்துகொண்டே இருந்தது, சுமார் இரண்டு மாதம் தான். மீண்டும் நிலைமை மோசமானது, என்னால் படிப்பிற்கு இடையில் அலையமுடியவில்லை. எனவே கோவை கங்கா மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரும் எனது நன்பருமான திரு பாலசுப்பிரமணியன் அவர்களிடம் ஆலோசனை கேட்டேன் அவர் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் தனக்கு தெரிந்த துளசி என்ற புற்றுநோய் நிபுனரிடம் தானே விவரமாக பேசிவிட்டு என்னிடம் நீங்கள் இன்றே சந்தியுங்கள் என்றார். அவர் சொன்ன மருத்துவரோ நீங்கள் இனி மருத்துவம் பார்க்கவேண்டாம் இனி எந்த பயனில்லை என்றார் நான் மிகவும் நொந்துவிட்டேன், எனக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டார். நான் மீண்டும் எனது நன்பரிடமே பேசினேன் அவரும் பேசிவிட்டு இதே கருத்தை கூறினார். நான் இதை வீட்டில் தங்கைகளிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் விழித்தவன் ஒருவழியாக சொல்லிவிட்டேன். ஆனால் எங்கள் யாராலும் அமைதியாக இருக்கமுடியவில்லை ஓரிரு நாளில் நாங்கள் டாக்டரிடம் ஆலோசிக்காமலேயே நேரடியாக மருத்துவமணைக்கே போய்விட்டோம். ஆனால் அந்த பெண் டாக்டரோ அமெரிக்காவிற்கு போய்விட்டார், மீண்டும் நண்பரிடம் பேசி, அந்த பெண் டாக்டர் தன் சார்பில் ஒரு மருத்துவரை பார்க்க சொன்னார். 15 நாள் சிகிச்சை அம்மாவை மிக மோசமாக்கிவிட்டது, அமெரிக்காவில் இருந்து வந்த பெண் டாக்டரோ என்னை அழைத்து ஏன் நான் தான் சிகிச்சை வேண்டாம் என்று சொன்னேனே என்றார், என்றாலும் என் நிலைமையை புரிந்துகொண்டு மேலும் பத்து நாட்கள் தன் மேற்பார்வையில் சிகிச்சையளித்தார். கடைசியாக 2 யூனிட் இரத்தம் கொடுக்கப்பட்டு மருத்துவமணையிலிருந்து அனுப்பினர். ஆனால் அதிகபட்சம் மூண்று மாதம் அவகாசமே கொடுத்தார் அந்த மருத்துவர். நானோ அப்போது எம்.பி.ஏ முதலாமாண்டு முடித்து மதுரை டி.வி.எஸ் சில் இரண்டு மாத புராஜெக்ட்டை ஆரம்பித்த மூன்றாவது நாள் அலுவலக்த்திற்கு வந்த அழைப்பு அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது உடனே புறப்பட்டு வா என்பதுதான், நான் உடனே எங்கள் உறவினரும் குடும்ப மருத்துவருமான டாக்டர் முத்துசாமியை அவர்களின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன், அவரோ இல்லடா ஏன் உனக்கு தெரியாதா இந்த நோய் வந்தா அடிக்கடி இந்த மாதிரி மயக்கம் வருவது சகஜம்தான் நான் பார்த்துகுறேன் நீ கவலைபடமா உன் வேலையை கவனி என்றார். அறை மணி நேரத்திற்கு ஒருமுறை அவரை தொடர்புகொண்டு விசாரித்துக்கொண்டிருந்தேன், 3 வது அழைப்புக்கொல்லாம் டே நீ அங்கிருந்துகிட்ட விசாரிச்சிகிட்டு இருந்தா எப்படி உடனே கிளம்பி வா என்று கூறியதும் நான் உடைந்துவிட்டேன், உடனே ஈ.டி.பி செக்க்ஷனின் சீனியர் மேனேஜர் திரு. ஆணந்தராஜ் அவர்களிடம் நிலைமையை சொல்லிவிட்டு உடனே கிளம்பினேன். மாலையே மருத்துவமணைக்கு போய்விட்டேன். சொந்தங்கள் சில அருகில் இருந்தனர், நன்றாக தெம்பாகவே பேசினார் பயப்படவேண்டாம் நான் நன்றாகவே இருக்கிறேன் என்று கூறியது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. என்னை முகசவரம் செய்துவிட்டு வருமாறு கூறினார், வீட்டிற்கு சென்று சவரம் செய்துகொண்டு சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் இரவு மருத்துவமணைக்கு வந்துவிட்டேன். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் படிப்படியாக நிலைமை மோசமாகி கொண்டே போனது, முதலில் உணவு உட்கொள்வதில் சிரமம், பின் பேச்சு குறைய ஆரம்பித்தது, என்னை அழைத்த மருத்துவர் நீ வீட்டுக்கு அழைச்சிகிட்டு போறதுன்னா போ ஆனா இங்க இருக்கிறதனால எனக்கு ஒன்னும் சிரமமில்ல என்றார், என்ன சார் நிலைமை வெளிப்படையா சொல்லுங்க என்றேன். இல்லடா இனிமே காப்பாத்தமுடியாது உலகத்துல யாராக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல இந்த நோய்வாய்பட்டவர்கள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தாலும் முடிவ யாரும் மாத்தமுடியாது, மனச தைரியமா வச்சிக்கோ இன்னும் ஒரு சில நாள் தான் ஆனா இனி மருந்து கொடுப்பதனால எந்த பயனுமில்ல ஆனா நீ வேற எங்கயாவது கொண்டு போனாலும் ரொம்ப சிரமபடுத்திடுவாங்க ஆனா பயனிருக்காது அதனால் "PREPARE HER FOR A PEACEFUL END" என்றே கூறிவிட்டார், நான் புரிந்துகொண்டேன், அம்மாவிடம் வீட்டிற்கு போகலாம் என்றதும் டாக்டர் என்ன சொன்னார் என்றார், வீட்டிற்கு அழைத்து சொல்லுமாறு கூறியிருக்கிறார், மீண்டும் சிரமம் என்றால் வரச்சொன்னார் என்று கூறினேன், அரை மனதுடன் வீட்டிற்கு கிளம்பினோம், நானே காரில் அம்மாவை தூக்கிகொண்டு வந்து அமரவைத்தேன். ஆனால் நிலைமை மோசமாகி கொண்டே போனது, யாரும் தூங்கவில்லை, என்னால் பெற்ற தாயின் துயரம் கண்டு வேதனையை தாங்கமுடியவில்லை, கடந்த ஒரு வாரத்தின் அலைச்சல் என்னை அசதியாக்கினாலும் தூங்கவில்லை, பேச்சு முற்றிலுமாக இல்லை நள்ளிரவு தாகத்தால் துடித்தார் ஆனால் தண்ணீர் கூட இறங்கவில்லை, ஒரு சொம்பு தண்ணி குடிச்சுட்டா நிம்மதியா உசுர விட்டுறுவேன் என்று செய்கையால் காட்டியதை பார்த்து ஒரு மகனால் பெற்ற தாயின் தாகத்திற்குகூட தண்ணீர் கொடுக்கமுடியவில்லையே என்று துடித்தவன் விடியற்காலை எப்பாடுபட்டேனும் ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு கோவைக்கு நான் மட்டும் புறப்பட்டேன், மீண்டும் அந்த பெண் டாக்டர் வெளிநாடு பயணமாகியிருந்தார், அதனால் வேறு மருத்துவர் நிலைமையை கேட்டுக்கொண்டு 5 டாக்டர்கள் ஆலோசித்தனர் பின்னர் சில மருந்துகளை எழுதிகொடுத்தனர், தண்ணீர் கொடுக்கமுடிந்தால் கொடுத்து அழைத்து வாருங்கள் இங்கே வந்தால் தான் மேலும் சிகிச்சையளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். நான் வீட்டிற்கு போகும் முன்பு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர், நான் மருந்தை கொடுத்து சில மணி நேரத்தில் நன்றாகவே தண்ணீர் குடித்ததை கண்டு நான் என் கடமையை செய்ததாகவே கருதினேன், இந்த மருந்தை குடித்து உடல்நிலை சற்று தேறியதும் தனக்கு மரணமில்லை என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டது. ஆனால் எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் என்பதால் நான் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன். ஆனால் அம்மாவின் உடல்நலை தேற ஆரம்பித்தது. நன்றாகவே நீர் இறங்கியது, ஒரு சில வார்த்தை பேசினார். இப்படியே அடுத்த நாள் மதியம் வரை நகர்ந்தது. ஆனால் உறவினர்கள் தொடர்ச்சியாக வர ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அம்மாவோ என்னை கோவைக்கு அழைத்து போ என்கிறார், எனக்கோ அங்கு போகும் வழியிலோ போன பின்போ உயிர் பிரிந்துவிட்டால் நான் தனியாளாக என்ன செய்யமுடியும்? இருப்பினும் கிளம்பினோம், நாங்கள் எங்கள் தாயாருடன் செய்த கடைசி பயணம், போகும் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிள் பல்ப் கொடுத்துக்கொண்டே போனோம், ஆனால் கண்கள் சாம்பல் நிறமாக மாறிக்கொண்டிருந்தது ஆனால் அது அம்மாவிற்கு தெரியாது. ஒருவழியாக மருத்துவமணை போய் சேர்ந்தோம், பரிசோதித்த மருத்துவர் நான் எந்த உத்திரவாதமும் கொடுக்கமுடியாது எந்த நேரத்திலும் உயிர் பிரியலாம் நீங்கள் எதற்கும் தயாராக இருந்தால் சேர்த்துகொள்கிறேன் ஆலோசித்து சொல்லுங்கள் என்றார் நான் தங்கைகள் தம்பி கூடி ஆலோசித்தோம் ஆனால் அம்மாவிடம் ஏதும் சொல்லவில்லை. அன்று இரவு நிலைமை மோசமாகிகொண்டே போனது. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் அதற்குமுன் ஆகாரம் கொடுக்கவேண்டும் டியூப் மூலம் தான் செய்யமுடியும் என்று எங்களை வெளியில் அனுப்பிவிட்டு டியூபை செலுத்த முயற்சித்தவர்கள் உயிரை எடுத்துவிட்டார்கள், இறுதி மூச்சி போகும்போதுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டோம், நாங்கள் கத்திக்கொண்டே உள்ளே நுழைவதை உயிர்மூச்சை திரட்டி கண்ணை சுழற்றி பார்க்கும் போது சுயநினைவு போய்கொண்டிருந்தது, இறுதியாய் ஒரு மூச்சு இழுத்தது எங்களின் மூச்சாய் வாழ்ந்த தாயை இழந்துவிட்டோம். இந்த நிமிடமும் என்னால் விம்மி வரும் அழுகையை அடக்கமுடிவதில்லை. அதற்கு பின் தங்கையின் திருமணம், சீமந்தம், குழந்தை பிறப்பு என வீட்டில் நடந்த ஒவ்வொரு முறையும் என் தாய் இல்லாமல் போன வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை, என் தாய் இல்லாத சூழ்நிலையில் நான் அகத்தில் அழுதேன் வெளியே காட்டிக்கொள்வதில்லை. ஆனால் நாங்கள் காத்திருந்த முதல் பிள்ளையை பெற்றெடுத்த பிறகு என் தாய் இல்லாமல் போனதை நினைத்து அழ என் தங்கைகள் என்னை தேற்றும் நிலையாகிவிட்டது. மீண்டும் நான் என் தாயை கானப்போவதில்லை, ஆனால் எங்களுள் எண்ணத்தோடு வாழும் தாய்க்கு என்றும் மரணமில்லை, அவள் வழிகாட்டுதலிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவிக்கான இலக்கனமாகவும், அர்த்தமாகவும் விலங்கியவள் 44வது வயதில் மரணமடைந்தது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமின்றி எங்கள் சொந்தங்கள் அனைவருக்குமே ஒரு நல்ல சினேகிதியையும், புத்திசாலியும், விடாமுயற்சியின் அடையாளமாக இருந்த ஒரு அழகுமயில் மடிந்துவிட்ட சோகம் எல்லோரையுமே மிகுதியாகவே வருத்தியது.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment