சவால்கள்................
கல்லூரி இறுதி முடிவில் எனக்கு பெரிய் இடி விழுந்தது। தேர்வுகளில் தேறிவிட்டேன் ஆனால் நான் வாங்கிய சராசரி சதவிகிதமோ 59।8%। தமிழ்நாட்டிலுள்ள எந்த பல்கலைகழகத்தில் சேரவும் 60% தேவை। 0।2% என் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று நான் நினைக்கவில்லை। இதற்கிடையே அழக்கப்பா பல்கலைகழகத்திலிருந்து எம்।எஸ்.சி க்கான சேர்க்கை அழைப்பு பறந்து வந்தது. ஆனால் 15 அவகாசம் இருந்தது. அதற்குள் ஏதாவது செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வீட்டிலோ ஒரே அழுகையும் கேள்விக்குறியாகவும் சோகமும் நிலவியது. யாருக்கும் உறக்கமில்லை. என் தந்தையுடன் வேலை செய்யும் ஒரு கெமிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச்சென்றார் ஆனால் அவரோ இதற்கென்ன செய்யமுடியும் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் அவரிடம் விசயம் இருப்பது அறிந்துதான் அவரை அனுகினோம். இறுதியாக மனிதர் தனது செல்வாக்கை ஓரளவு பயன்படுத்த ஒப்புக்கொண்டார். அவருக்கு அப்போது பாரதியார் பல்கலைகழத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான திரு. தண்டபானியையும் அழகப்பா பல்கலைகழகத்தின் இயற்பியல் துறைத்தலைவரையும் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ஆனால் அவர் என் விவகரத்தில் எதையும் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது. அவர்களை சந்திக்க மட்டும் ஒரு அறிமுக கடிதம் கொடுப்பதாக கூறினார். அடுத்த நாள் தருவதாக கூறியவரிடம் கால நேரம் குறைவாக இருப்பதை எடுத்துரைத்து உடனே அறிமுக கடிதத்தை பெற்றுக்கொண்டோம். ஆனால் இப்போது யாரை முதலில் சந்திப்பது என்பதில் எனக்குள் ஒரு மணப்போராட்டம். இறுதியாக மார்க் விசயத்தை முதலில் கவனிப்பதுதான் முழுமையான தீர்வு என தீர்மாணித்துக்கொண்டு பாரதியார் பல்கலைகழகம் புறப்பட்டேன். கொள்ளைக்கு போனாலும் கூட்டாவாது என்பார்கள் ஆனால் நானோ என்னொடு படித்த இன்னொரு நண்பனுக்கும் இதே பிரச்சனை, அவனையும் நான் அழைத்தது அன்றைய தினத்தில் பெரிய தலைவலியானது. அவனுக்கு பல்கலைகழத்தில் படிக்கும் ஆர்வமில்லை, ஏற்கனவே ஏதோ ஒரு கல்லூரியில் பணம் கொடுத்து சீட் வாங்கியிருந்தவனை நான் வற்புறுத்தி அழைத்து சென்றேன். அன்று பல்கலைகழத்தை அடைந்த போது அலுவலக நேரம் கடந்துவிட்டது. சலிப்புடன் 150 கிலோமீட்டர் பயனித்து வீடு வந்து சேர்ந்து மீண்டும் அடுத்த நாள் 150 கி.மீ பயணித்து பல்கலைகழகத்தில் கண்ட்ரோலரை நெடுநேரம் காத்திருந்து சந்தித்தோம். அறிமுக கடிதத்தை படித்துவிட்டு என் பிரச்சனையை கவணமாக கேட்டவர், இந்த பிரச்சனைக்கு தான் சலுகையாக ஏதும் செய்யத்தேவையில்லை, பல்கலைகழக நடைமுறையிலேயே இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என்ற பொன்னான வார்த்தைகளை உதிர்த்தார்.நாம் சில முற்றுபெற்றுவிட்டதாக நினைக்கும் விசயங்கள்கூட சில நேரங்களில் முயற்சி செய்தால் வெற்றியின் பாதை தெரியும். அவரிடம் அதற்கான நடைமுறைகளை தெரிந்துகொண்டோம். இந்த கருணை அடிப்படையில் மதிப்பென் கோருவது என்னைப்போல இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர் மொத்த மதிப்பென் தேவை 10 மிகாமலும் இதற்கு முந்தைய தேர்வுகளில் தேர்ச்சிக்காக இப்படி கருணை அடிப்படையில் பரிசீலிக்கப்படாதவராக இருக்கவேண்டும். அதாவது சில நேரங்களில் 35 மதிப்பென் தேவைப்படும் இடத்தில் 34 மதிப்பென் வாங்கியிருந்தாலும் கருணை அடிப்படையில் சிலருக்கு 35 மதிப்பென் கொடுக்கப்படுவது உண்டு. மேலும் என் கல்லூரியில் உள்ள துறைத்தலைவரும், முதல்வரும் இதற்காக பருந்துரைக்க வேண்டும். அப்படி பரிந்துரைத்தால் அது பல்கலைகழகத்தின் துனைவேந்தர் மற்றும் சிண்டிகேட்டின் பரிசீலனைக்கு அனுப்பபட்டு அங்கே ஏற்க்கப்பட்டால் இந்த கருணை மனு சாதகமாக அமையலாம் என்று கூறினார். உடனே அவரிடம் அதற்கான படிவங்களை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். அன்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த திரு. தண்டபானி இந்த விளக்கத்தை சொல்லியிருக்காவிட்டால் நான் பல்கலைகழகத்தில் படித்திருக்கமுடியாது. அடுத்த நாள் நான் மட்டும் எனது துறைத்தலைவர் திரு. நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து விளக்கினேன், அவருக்கு சந்தோசத்திற்கு அளவில்லை, உடனடியாக பரிந்துரை மனுவில் உரிய விவரங்களுடன் கையெழுத்திட்டு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு கல்லூரி முதல்வர் திரு. சிவகுமாரை என் நண்பன் ஒருவனுடன் அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரும் இதுபோல் ஒரு வசதி உள்ளதா என்று ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, உன்னால் நம்ம கல்லூரி பசங்களுக்கு இனி எதிர்காலத்தில் இதுபோல ஒரு காரியத்தை எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று என்னை பாராட்டியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் சேரும் போது அவரிடம் பேசியது அதன் பிறகு அவரிடம் பேசியதில்லை, இப்படி மாணவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளும் முதல்வரை நாங்கள் எவ்வள்வு மன வேதனைக்கு ஆளாக்கியிருப்போம் என்று தோன்றியது. துறைத்தலைவர் மற்றும் முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் எனது இறுதி தேர்வு மதிப்பென் பட்டியலுடன் கோவைக்கு பயணமானோம். என்னுடன் வந்த வகுப்பு தோழன் அவனுடைய மதிப்பென் பட்டியலை கொண்டு வரவில்லை. இதுவரை ஒரு நாள் மட்டுமே என்னுடன் வந்த அவனுக்கும் சேர்த்துதான் எல்லோரிடமும் கையெழுத்து வாங்கியுள்ளேன். ஆனால் இவன் மதிப்பென் கொண்டுவரவில்லை. அவனுக்கு முதல் வகுப்பு பெற 8 மதிப்பென் தேவை, எனக்கு 6 மதிப்பென் தேவை. கடைசியாக தேர்வு கட்டுப்பாட்டு மையத்தில் அவனுடைய மதிப்பென் பட்டியலும் இனைத்தால் தான் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவர்களை கெஞ்சி கூத்தாடி மறுநாள் கொடுத்துவிடுவதாக கூறி மனுவை ஒப்படைத்தோம். இப்போது இவன் பட்டியலை கொடுக்காவிட்டால் என் பட்டியல் குப்பைக்கு போய்விடுமே. ஆனால் அவன் மூன்று நாள் கழித்துதான் பட்டியலை சமர்ப்பித்து இருந்தான். இதற்கிடையே அழகப்பா பல்கலைகழத்தின் இயற்பியல்துறை தலைவரை பல்கலைகழகத்தில் சேரப்போகும் நாளன்று சென்று பார்த்தேன். அவர் எனக்கும் அழகப்பா பல்கலைகழகத்தின் கணினித்துறை தலைவர் சக்திவேலுடன் நமக்கு ஆகாது ஆனால் வேறு நண்பர் மூலம் தொலைபேசியில் பேச சொல்கிறேன் என்றார். எனக்கு எனோ நம்பிக்கையில்லை. ஆனால் துறைத்தலைவர் சக்திவேலிடம் என் எதிரேலேயே பேசப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட மதிப்பென் பட்டியலை ஒரு மாதத்திற்குள் ஒப்படைக்காவிட்டால் தாமாகவே பல்கலைகழகத்திலிருந்து விலகிகொள்வதாக எழுதி வாங்கிகொண்டு மாணவர் சேர்ப்பு ஆவனத்தில் கையெழுத்திட்டார். ஒட்டுமொத்தமாக பலருடைய கருணையும் ஆதரவும் இந்த விவகாரத்தில் பக்கபலமாக இருந்ததே இந்த வெற்றிக்கு காரணம். கவலைகள் மறந்து மகனை பல்கலைகழகத்தில் சேர்த்துவிட்ட பெருமிதம் கானப்பட்டது. இருந்தாலும் எல்லோரிடமும் ஓர் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஓர் நம்பிக்கையுடன் பல்கலைகழக விடுதியில் சேர்ந்தேன்.
கோமாளி.............................
காரைக்குடி ஒரு பாலனைவணத்தை போல வெயில் சுட்டெரிக்கும் பிரதேசம்। இலங்கை அரசு தொலைகாட்சியான ரூபவாகினியின் ஒலிபரப்பு அங்கே தெரியும். ஒரு மதியம் விடுதி தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, முதலில் எடுத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் அழைப்பு, எதிர்முனையில் பேசிய பெண் நீங்கள் என்றார், நானோ நீங்கள் யார் என்றதும் அதற்கு பதிலேதும் பேசாமல் சார் நீங்க வாட்ச் கட்டியிருக்கீங்கல என்று கேட்டாள். தற்போது கட்டியிருக்கவில்லை ஆனால் கட்டும் வழக்கம் உண்டு என்றேன், சார் ப்ளீஸ் கொஞ்சம் டைம் என்னன்னு சொல்லுங்க என்றார். இல்லைங்க பக்கத்துல யாருமில்லை என்றேன், மீண்டும் சார் ப்ளீஸ் கொஞ்சம் அர்ஜண்ட் சீக்கிரம் பார்த்து சொல்லுங்க என்றதும் நான் என்னவோ ஏதோ என்று ப்தரிப்போய் எனது அறையிலுள்ள கடிகாரத்தில் மனியை பார்த்துவிட்டு சொன்னேன். உங்க வாட்ச் ஓடுதா என்றாள், ஓடுதுங்களே என்றேன், நீங்களும் பின்னாடியே ஓடுங்க என்று கூறிவிட்டு இமைக்கும் நேரத்தில் துண்டித்துவிட்டாள். ஏதோ கணவு கண்டால் வெளியில் சொல்லக்கூடாதாம். நான் இதை யாரிடம் சொல்ல? மீண்டும் அழைப்பு நான் விஜய் டி.வியிலிருந்து பேசுகிறேன் உங்களுக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றாள். நீங்கதான் முன்னாடி பேசுனதா என்று கோவமாக கேட்க இல்ல என் பிரண்டு என்றது அந்த குரல். ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைக்காமல் பேசக்கூடிய தொலைபேசி ஒரு காலத்தில் இருந்தது சிலருக்கு நிணைவு இருக்கலாம். அதனால் வந்த வினை. என்னிடம் ஒவ்வொருவராக மொத்தம் 45 நிமிடம் பேசினார்கள், பேசியவர்கள் எனது சீனியர் பெண்குலங்கள் என்று பிற்காலத்தில் தெரிந்தது.
பட்டக்காலிலேயே................................
பாரதியார் பல்கலைகழகத்தில் எம்।எஸ்.சி க்கான நேர்முக தேர்வு ஏதோ கோவைக்கு பயணமானேன், நேர்முக தேர்விலும் இதே கேள்வி எழுப்பபட்டது. நான் தேர்வு செய்யப்பட்டால் உடனே முதல் வகுப்பு சான்றிதழ் சமர்பிக்கவேண்டும் என்று பாரதியார் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துறைத்தலைவர்(பொறுப்பு) திரு தம்பிதுரை கூறிய தோரணையிலேயே புரிந்துவிட்டது நான் தேர்வு செய்யப்பட்டுவிடுவேன் என்பது. மேலும் நேர்முக தேர்வில் அழகப்பா பல்கலைகழக துறைத்தலைவர் சக்திவேலை பற்றி விசாரித்தார் தம்பிதுரை, பின்னர் தான் தெரிந்தது தம்பிதுரை அழகப்பா பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் சக்திவேல்தான் அவருடைய ஆராய்ச்சி வழிகாட்டி என்பதும். ஒரு சில நாளில் பாரதியார் பல்கலைகழகத்திலிருந்து பதிவு தபால் வீட்டிற்கு வந்துள்ளது என்னை தொடர்புகொள்ள முயற்சித்து இரண்டு நாள் கழித்து விவரத்தை சொல்லவே நான் அதை ரீ-டைரக்ட் செய்து காரைக்குடிக்கு அனுப்ப சொல்லிவிட்டேன். விடுதியில் எனக்கு ஒதுக்கப்பட்ட 11 எண் அறையில் தங்காமல் 6ம் எண் அறையில் நண்பருடன் தங்கியிருந்தேன். என்னிடம் தபால்காரர் 11ம் அறை எது என்று கேட்டார் நான் கையைகாட்டிவிட்டு எனது அறைதான் 11 என்பதை மறந்து விவரத்தை கேட்காமல் விட்டுவிட்டேன். இரவு அழைத்து எனக்கு கடிதம் கிடைத்ததா என்று கேட்ட தந்தையிடம் இல்லை என்று கூறி நாளை ஒருமுறை தபால் நிலையத்தில் விசாரியுங்கள் என்று கூறினேன், இப்படி விசாரிப்பிலேயே இரண்டு நாள் போய்விட்டது. இறுதியாய் அழகப்பா பல்கலைகழகத்தின் தபால் நிலையத்தில் கேட்க கடிதம் வந்து மூன்று நாள் ஆகிறது என்றும் ஒரு துண்டுச்சீட்டு 11ம் எண் அறையில் போட்டதாகவும் கூறினார் தபால்காரர், பிறகுதான் தெரிந்தது அன்று அவர் கேட்டது எனக்காகத்தான் என்று. துண்டுச்சீட்டை எடுத்துக்கொண்டு சென்றவனிடம் நான் தான் கடிதத்திற்குறியவன் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சி கேட்டனர். பிறகு நண்பர்களை அழைத்துக்கொண்டு பல்கலைகழகத்தில் சேர்ந்ததற்கான கட்டண ரசீதைக்காட்டி கடிதத்தை வாங்கி பிரித்துப்பார்த்தால் பாரதியார் பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி சேருவதற்கான கடைசி தேதியன்றுதான் நான் கடிதத்தையே கையில் வாங்குகிறேன். உடனே பாரதியார் பல்கலைகழத்திற்கு அழைத்தால் இன்று வரவில்லை என்றால் சேர்க்கப்படமாட்டாது என்று உறுதியாக கூறிவிட்டார்கள் அன்றோ சனிக்கிழமை. ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமை ஏதோ பண்டிகை காரணமாக அரசு விடுமுறை. உடனே வீட்டில் விவரத்தை கூறுமாறு என் நண்பன் ஒருவனுக்கு சொல்ல அவன் குழப்பிவிட்டான். என் தந்தை நான் கோவைக்கு செல்வதாக நினைத்து அவரும் கோவைக்கு கிளம்பியிருக்கிறார். குழப்பத்துடன் தவித்த என்னை நணபர்களும் சீனியர்களும் தைரியம் சொல்லி பேருந்தில் ஏற்றிவிட்டார்கள், புரியாத புதிராக வீடு வந்து சேர்வதற்குள் மேலும் ஒரு பதிவு தபால் பாரதியார் பல்கலைகழகத்திலிருந்து வந்திருக்கிறது வீட்டிற்கு. இரவு வீட்டிற்கு வந்தவனுக்கு இந்த செய்திகளால் மேலும் அதிர்ச்சி குழப்பம். நள்ளிரவு வீடு திரும்பிய என் தந்தை சிறிதும் கோபப்படாமல் பிரச்சனையை ஆலோசித்தோம் ஞாயிற்றுக்கிழமை தலைமை தபால் அதிகாரியை சந்தித்து புதிதாக வந்திருக்கும் பதிவு தபால் பற்றி கேட்க அவரோ இன்று எதுவும் செய்யமுடியாது வேண்டுமானால் ஒரு கடிதம் கொடுங்கள் அதை வைத்து உங்கள் தந்தையிடம் கடிதத்தை கொடுக்கிறேன் என்றார். அதுவும் இந்த கடிதம் கொடுக்க வேறு நடைமுறை உண்டாம், எங்கள் பகுதியில் தபால் பட்டுவாடா செய்யும் தபால்காரர் முன்னிலையில் தான் கையெழுத்து போடவேண்டுமாம், எனவே அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இது சாத்தியம் என்று கூறிவிட்டார். சரி ஏதோ உள்ளூரில் இந்த அளவிற்கு கூடவா செய்யமுடியாது என்ற நம்பிக்கையில் எனது கல்லூரி துறைத்தலைவரிடம் மீண்டும் போய் நின்று எனது நிலையை கூறினேன்.
Thursday, December 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment