Thursday, December 20, 2007

கவணக்குறைவு.............................

என்னப்பா இது சீட்டு வாங்க தெரிஞ்ச உனக்கு பொறுப்பு இல்லையே இப்படி டென்னிஸ் பந்து மாதிரி அல்லாடுறியே என்று கூறிவிட்டு பாரதியார் பல்கலையின் துறைத்தலைவர் தம்பிதுரையிடம் பேச அவரோ சேர்க்கை நடைமுறைகளில் தாம் ஏதும் தலையிடமுடியாது, மாணவர்களை தேர்ந்தெடுப்பதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்। ஆனால் அவர் மீது அந்த ஆண்டில் தான் மாணவர் சேர்க்கையில் குழறுபடி செய்ததாக ஒரு மாணவி வழக்கு தொடர்ந்தார், நீதிமண்றத்தின் கண்டனத்திற்கும் ஆளானார்। அந்த மாணவி வழக்கில் வெற்றி பெற்றாலும் காலம் கடந்துவிட்டதால் அவரால் சேரமுடியவில்லை. ஆனால் எனது துறைத்தலைவரோ எனக்கு நம்பிக்கை தரும் விதமாக உன்னோட சீட்டு உனக்கு கிடைக்கனும் இல்லாட்டி நான் விடமாட்டேன், நீ தைரியமா போ என்று கூடவே இரண்டு பரிந்துரை கடிதங்களை இரண்டு பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர்களை அன்றே சந்திக்குமாறு கொடுத்து அனுப்பியதோடு அவர்களிடம் தொலைபேசியில் பேசினார். ஒருவர் மட்டுமே இருந்தார் அவரோ பாரதிதாசன் கல்லூரியின் அப்போதைய முதல்வர் திரு. ஆறுமுகம். முதலில் சந்திக்க மறுத்த அவரிடம் மாணவனை சந்தியுங்கள் பிறகு நீங்கள் உங்கள் விருப்பபடி உதவுவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என்று சொன்னவர் முடிந்தவரை ஒரு சிபாரிசு கடிதம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் என்னிடம் அவர் கல்லூரி முதல்வர் என்பதால் அவருக்கு பல்கலைகழக்த்தில் ஆக வேண்டிய வேலை நிறைய இருக்கும் அதனால் அவர் கடிதம் கொடுப்பது சந்தேகம்தான் கொடுத்தாலும் பெரிய மரியாதை இருக்காது, இருந்தாலும் நீ பதிவாளரை சந்திக்க ஒரு கடவுச்சீட்டாக இருக்கும் அதனால் சந்தித்து பேசு என்றார். நான் உடனடியாக அந்த சிண்டிகேட் உறுப்பினரை ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். என்னிடம் சற்று தன்மையாக பேசியவர் இதெல்லாம் நான் எப்படிப்பா செய்யமுடியும் நீ அன்றைய தினம் போகாதது உன் தவறுதானே என்றவர், ஒரு கடிதத்தில் "The Student who is bearing this letter is known to me and his case may be considered" என்று எழுதி கையெழுத்திட்டு தனது சிண்டிகேட் முத்திரையையும் பதித்து கொடுத்தது என்னை நெகிழ வைத்துவிட்டது. பல மனிதர்கள் தொலைபேசியில் பேசும்போது சற்று கடினமாக பேசி தவிர்ப்பதும் பிறகு நேரில் சந்திக்கும் போது நாம் எதிர்ப்பார்ப்பதைவிட அதிகமாக செய்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுகின்றனர். கடிதத்தை பெற்றுக்கொண்டு நன்றியுடன் அடுத்த சிண்டிகேட் உறுப்பினர் முனைவர் கிங்ஸ்லி, எங்கள் கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர் தான் அவரை சந்திக்க சென்றால் அவர் வீட்டில் இல்லை. நெடுநேரம் இரவு வரவில்லை என்பதை என் துறைத்தலைவருக்கு தெரிவித்தேன். சரி நாளைக்கு மதியத்திற்கு பிறகு முயற்சி செய் இப்போது பத்திரமாக வீட்டிற்கு போ என்று கூறிவிட்டார். அடுத்த நாள் திங்கட்கிழமை வீட்டிலிருந்து கிளம்பும் முன் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு, என் தந்தையிடம் அடுத்த நாள் பதிவு தபாலை பெற்றுக்கொண்டு விரைவாக கோவை வருமாறு கூறிவிட்டு வேண்டிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு ஈரோடு நோக்கி புறப்பட்டேன். அதற்கு முன்பே என் கல்லூரி தோழன் கண்ணனின் வீட்டில் இரவு தங்குவதற்கு சொல்லிவிட்டேன். மதியம் முனைவர் கிங்ஸ்லி வீட்டில் இல்லை எனவே என் நண்பன் வீட்டிற்கு சென்றுவிட்டு மாலை மீண்டும் முனைவர் கிங்ஸ்லி வீட்டிற்கு வந்தபோது இரவு 7.30 மணி வீட்டுத்தோட்டத்தில் ஏதோ கொத்திகொண்டு இருந்தார். நான் விவரத்தை சொல்ல அவரோ என்னப்ப இது இதுக்கு நான் என்ன பண்ணமுடியும் எம் பொண்ணுக்கு சென்னை பல்கலைகழகத்துல ஒரு மணி நேரம் காலதாமதம் ஆனதால சீட் கிடைக்கல, உன்னோட டைம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுதுப்பா என்றார். இல்ல சார் இன்னும் வெய்டிங் லிஸ்ட் மூவ் ஆகல, நாளைக்குத்தான் அதுக்குள்ள தடுத்திடலாம் சார் என்றேன். நான் யாருப்ப அதை தடுக்க சிண்டிகேட் பல்கலைகழகம் சரியா இயங்குதான்னு பார்க்கத்தானே தவிர நிருவாகத்தின் நடவடிக்கைகள்ல தலையிட்டு உடைக்கிறது இல்லப்பா என்னால முடியாது என்று கூறிவிட்டார். உடனே எனது துறைதலைவருக்கு விசயத்தை எடுத்துக்கூறினேன், சரி பயப்படாத நான் மதியமே அவருக்கு முயற்சி பன்னினேன் கிடைக்கல அவரு ஆள் இருந்த நான் பேசுறேன் பிரச்சனையில்ல என்றார், அதோடு இவர் பவர்புல்லா ஆளு ரொம்ப கறார் பேர்வழி ஆனா இவர் நமக்காக கெல்ப் பன்னினா யாரும் தட்டமுடியாது ஏனா இவர் நியாயமாதான் சிபாரிசு பன்னுவார் என்று கூறிவிட்டு எனது நண்பனின் தொலைபேசி எண்ணை குறித்துக்கொண்டு மீண்டும் தானே அழைப்பதாக கூறினார். சில நிமிடங்களில் அவரே அழைத்தார். நான் அவர்கிட்ட பேசிட்டேன்பா, நீ நாளைக்கு சரியா 9.15 மணிக்கு துனை பதிவாளர் தங்கவேலு அலுவலகத்துக்கு போயிடு எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றார். சிலரிடம் பேசவேண்டியவர்கள் பேசினால் நடக்காத விசயமும் நடக்கும்.நம்பிக்கையுடன் இருந்தாலும் விடிய தூங்கவில்லை, இரவு 3.30 மணிக்கே கோவை நோக்கி புறப்பட்டுவிட்டேன். அதிகாலை சூரியனின் விடியலில் கோவையில் இறங்கி மருதமலை பேருந்து பிடித்து பயனமாகி, எனது சீனியரின் அறையில் சென்று குளித்துவிட்டு துனை பதிவாளர் தங்கவேலுவின் அறை இருக்குமிடத்தை கேட்டுக்கொண்டேன். குளித்து கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு சீனியருடன் பல்கலைகழக நிருவாக காட்டிடம் நோக்கி புறப்பட்டேன். கட்டிடத்தின் வெளியே விடைபெற்றுக்கொண்டு சீனியர் புறப்பட்டுவிட நான் துனை பதிவாளர் அறைக்கு வெளியே 9.15க்காக காத்திருந்தேன். சரியாக 9.15 க்கு உள்ளே நுழைந்தேன் ஆனால் பல்கலைகழக வேலை நேரம் 9.30 தான் ஆரம்பம். நடந்த விபரங்களை கேட்டுக்கொண்ட துனை பதிவாளர் சரி தபாலின் கவரைக்கொடு என்றார், அதாவது ரீ-டைரக்ட் செய்யப்பட்டது, டெலிவரி செய்யப்பட்ட தேதி இவைகளின் விவரத்தை அறிய. நான் கவரை கொடுத்ததுதான் தாமதம் மனிதர் சீட்டிலிருந்து பாயாத குறையாக யாருயா இவன் கிங்ஸ்லி இவன் என்ன பெரிய இவனா, இவன் என்ன உனக்கு ரெக்கமெண்டேஷனா? என்று குதியோ குதி என்று குதிக்க, நான் ஆடிப்போய்விட்டேன். காரணம் என் துறைத்தலைவர் முனைவர் கிங்ஸ்லியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கவரில் குறித்திருந்ததுதான். எனக்கு கவலை தொற்றிக்கொண்டது அட இவர நாம நேராப்பார்த்திருந்தா கூட பிரச்சனையில்ல போல இருக்கே இப்ப இவரு என்ன பன்ன போறாரோ என்ற கவலையில் பவ்யமாக நின்றேன், இன்னொரு சிண்டிகேட் ஆறுமுகத்தின் கடிதத்தை மறைத்துக்கொண்டேன். தொலைபேசி ஒலித்தது தொலைபேசியை எடுத்து பேசிய மனிதரிடம் கடுமை மாறி மென்மையும் புன்னகையும் தவழ்ந்தது, பேசியது முனைவர் கிங்ஸ்லிதான். நலம் விசாரிப்புகள் கல்லூரி, பல்கலைகழக நடப்புகள் என்ற பேச்சுகளினூடே ஆமாங்க அந்த கேண்டிடேட் என் முன்னாடிதான் இருக்காரு என்றதும் புரிந்துகொண்டு துனைபதிவாளரின் அறை தடுப்பை விட்டு வெளியே வந்து நின்று பேச்சுக்களை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தேன் சுமார் 5 நிமிட பேச்சுக்குப்பின் உள்ளே அழைக்கப்பட்டேன். ஏன்யா இந்த மாதிரி ரெக்கமெண்டேஷன்ல்லாம் கொண்டு வரிங்க உன் பிரச்சனை நியாயமான பிரச்சனைதானே, எதுவாயிருந்தாலும் நேரடியா வரனும்யா இப்படியெல்லாம் ஏன் எழுதிகிட்டு வர என்றவரிடம் இல்லங்க சார் அது எங்க HOD தான் எழுதிகொடுத்தாரு என்றேன் மேலும் சிக்கலாகிவிடும் விவரமறியாதவனாக. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை, அவர் முனைவர் கிங்ஸ்லியிடம் பேசியது இதுதான், இது ஒன்னும் சீரியசான விசயமல்ல, குறைந்தபட்ச அவகாசம் 15 நாட்கள் இருக்கவேண்டும், ஆனால் நாங்கள் கொடுத்த அவகாசம் ஒரு வாரம் தான் அதே சமயம் பையனுக்கு கொஞ்சம் லக் இருக்கு வெய்டிங் லிஸ்ட் மூவாகறதுக்கு முன்னாடியே வந்துட்டான் என்று அதோடு இந்த விவாகாரத்தை பாசிட்டிவாக முடிப்பதாகவும் கூறிவிட்டு வைத்தார். நிம்மதி பெருமூச்சுடன் அவரது உத்தரவுக்காக காத்திருந்தேன். தம்பி நீங்க நடந்த விவரத்தை ஒரு லெட்டர் எழுதி குடுங்க என்றார். கடகடவென எழுதிகொண்டு அவரிடம் நின்றேன், கடிதத்தை படிக்காமலேயே வைத்துவிட்டு தொலைபேசி எண்ணை சுழற்றி தம்பிதுரை வந்துட்டாரா என்று கேட்டார், சரி வந்ததும் நான் பேசினேன்னு சொல்லு எனக்கூறிவிட்டு போனை வைத்துவிட்டு என்னிடம் தம்பி நீங்க கம்பியூட்டர் டிபார்ட்மெண்டுக்கு போங்க நான் சொல்றேன் என்று கூறிவிட்டார். அறக்கப் பறக்க கம்பியூட்டர் சைன்ஸ் டிபார்ட்மெண்ட் நோக்கி விரைந்தேன், நான் துறைத்தலைவரின் கதவை நெருங்க நெருங்க யாருய்யா அது நாகராஜன்னு லேட் கேண்டிடேட்டு கூப்பிடு என்றார் தம்பிதுரை உள்ளிருந்து நான் சட்டென கதவருகே நின்றேன், கதவை திறந்துகொண்டு வெளியே வந்த பியூன் தங்கவேலு யாருப்பா நாகராஜன் என்றார், நான் தான் சார் என்றேன், அட உன்னத்தான புரொபசரு கூப்புடுறாரு உள்ள போ சீக்கிரம் என்றார். நான் உள்ளே சென்றேன். உனக்கு என்னய்யா பிரச்சனை என்றார், நான் தயராக வைத்திருந்த வார்த்தைகளை சொல்ல வாயெடுக்கும் போதே, நான் உங்கிட்ட அன்னைக்கே என்ன சொன்னேன் அட்மிஷனுக்கு வரும்போது பர்ஸ்ட் கிளாஸ் ப்ரொவிசனல் சர்டிபிகேட் இருக்கனும்னு சொன்னேன்யில்ல புரிஞ்சிக்காம இப்ப்டி லேட்டா வந்து நின்னா என்னய்யா அர்த்தம் என்றார். அவர் என் நேர்முக தேர்வில் சொன்ன வார்த்தைகளை சொன்னபோது நான் தான் அன்னிக்கே உன் அட்மிஷன கன்பார்ம் பண்ணிட்டேனே என்பதை சொல்லாமல் சொல்கிறார் என்று புரிந்துகொண்டேன். சரி டாக்குமெண்ட்ஸ் வச்சிருக்கியா என்றார். சார் இந்தாங்க என்று அட்மிஷனுக்காக அனுப்பபட்ட லெட்டரை கொடுத்தேன். இது இல்லையா டி.சி, மார்க்சீட்டு, கம்யூனிட்டி சர்டிபிக்கேட் வச்சுருக்கியா என்றார் இல்ல சார் அழகப்பா யுனிவர்சிட்டில இருக்கு என்றேன். ஏன்யா அங்க உனக்கென்ன குறைச்ச்லுன்னு இங்க வர இங்க ரொம்ப கஷ்டம் தெரியுமில்ல என்றார். தெரியும் சார் என்றேன். அப்புறம் ஏன்யா வர்ற என்றார், சார் காரைக்குடி ரொம்ப தூரம் சார், என்றேன் வீடு எங்க என்று கேட்டவர், ஏன்ய்யா ஒரு 2 மணி நேரம் வித்தியாசம், சினிமா பார்க்க கியூல நிக்கிறீங்க இல்ல என்றார். சரி உன் பிரச்சனைய ஒரு லெட்டர்ல எழுதிகொடு என்றார். சார் டெபுட்டி ரெஜிஸ்ட்ரார் கிட்டயே குடுத்திட்டேன் என்றேன். யோவ், இங்க ஒன்னு எழுதுயா என்றவர் இவனுங்கல எப்படி சமாளிக்கிறது. பெயிலாவுட்டும் பாரு தொலச்சிபுடுறேன் என்று மிரட்டினார். வெளியே வந்து கடிதம் எழுதிகொடுத்துவிட்டு காத்திருந்தேன். வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருந்தவர்கள் 30 பேர், ஆனால் மொத்த சீட்டே 25 தான். தனது அறையிலிருந்து வந்த தம்பிதுரை, பிரண்ட்ஸ் இப்போ மொத்தம் மூனு சீட்டு வேக்கண்டாயிருக்கு அதுல யார் யார் செலக்ட்டடுங்கிறது நான் டெப்டி ரெஜிஸ்ட்ரார் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வந்து அனவுன்ஸ் பண்றேன் என்றார். இதுதான் ப்ரேக்கப் என்று 1-MBC, 1-SC, 1-OC போட்டார். காத்திருப்போரில் என்னுடன் கருணை மதிப்பென் பெற்ற கல்லூரி நண்பனும்(MBC), தற்போது அழகப்பாவில் என்னுடன் படிக்கும் ஒருவனும்(BC) அடக்கம். BC க்கு சீட் இல்லாததால் தான் கிளம்புவதாக கூறினான் அழகப்பா நண்பன் அவனை சமாதனப்படுத்தி வந்தபிறகு முழுமையாக இரு பார்க்கலாம் என்றேன். என்னை துனை பதிவாளர் அறைக்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பினார் தம்பிதுரை. நான் அங்கு சென்றதும் இந்த பையனோட சீட்ட கன்பார்ம் பன்னினது போக மூன்று சீட் பேலன்ஸ் என்று போனது டிஸ்கஷன். எனக்கு சிறிது நேரத்தில் எப்படி கோட்டா ஒதுக்குகிறார்கள் என்பது ஓரளவு புரிந்தது. எனக்கு அன்று போக மூண்று நாட்கள் அவகாசம் தரப்பட்டது பாரதியார் பல்கலைகழகத்தில் சேர, அதற்கான கடிதங்களை எழுதி கொடுத்துவிட்டு என்னிடம் ஒரு நகல் வைத்துக்கொண்டேன். மீண்டும் துறைக்கு திரும்பி காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிக்கப்பட்டனர். 1-MBC என்னுடன் கருணை மதிப்பென் பெற்ற கல்லூரி நண்பன் 1-SC, SC கேண்டிடேட்டுகள் யருமில்லாததால் MBC பட்டியலில் இருந்த அடுத்த பெண்ணிற்கு போனது, 1-OC ல் OC கேண்டிடேட்டைவிட அதிக மதிப்பென் பெற்றிருப்பதால் என்னுடன் அழகப்பாவில் படித்த BC க்கு போனது. முதலில் அறிவிக்கப்பட்டதற்கும் தற்போதைய அறிவிப்பிற்கும் எவ்வள்வு வேறுபாடு பார்த்தீர்களா? அழகப்பா நண்பன் போயிருந்தால் அவனுக்கு கிடைத்திருக்குமா? அல்லது என்னுடன் கருணையடிப்ப்டையில் மதிப்பென் பெற்று இருக்காமல் விட்டிருந்தால் என் கல்லூரி நண்பனுக்கும் சீட் கிடைத்திருக்குமா?

No comments: